வெறும் டிரெண்ட் அல்ல… அறிவியல்! 36 மணி நேர விரதம் குறித்து VGM மருத்துவமனையின் சிறப்பு விளக்கவுரை

சமூக வலைதளங்களில் இப்போது மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் “36-மணிநேர விரதம்”. இது உடல் எடையை குறைப்பது முதல் இளமையை தக்கவைப்பது வரை பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையிலேயே பாதுகாப்பானதா? அல்லது வெறும் இணையத்து டிரெண்டா? என்று நம்மிடம் பல கேள்விகள் உண்டு.

இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளைத் தெளிவுபடுத்த VGM மருத்துவமனை ஒரு பிரத்யேக இணையவழி கருத்தரங்கை (Webinar) நடத்த உள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த டாக்டர் V.G. மோகன் பிரசாத்: (Chairman, VGM Hospital – உலகப்புகழ் பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் மதுரா பிரசாத் சுமன்: (Consultant Medical Gastroenterologist, VGM Hospital) அவர்கள் பங்குகொண்டு நோயற்ற வாழ்விற்காக பல மருத்துவ தகவல்களை பகிர உள்ளனர்.

Webinar Details:

Date: 11th February 2026
Time: 7:00 PM to 8:30 PM
Click here to Pre Register for Webinar
Prior registrion for this webinar is mandatory

ஆரோக்கியம் என்பது பிறரைப் பார்த்துச் செய்வதல்ல; அது நம் உடலைப் புரிந்து செய்வது. டாக்டர் மதுரா பிரசாத் சுமன் மற்றும் டாக்டர் V.G. மோகன் பிரசாத் ஆகியோருடன் இணைந்து உங்கள் ஆரோக்கியப் பயணத்தை அறிவியல் பூர்வமாகத் தொடங்குங்கள்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம்.

இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும்.

எப்படி உலோகக் கம்பி வழியே மின்சாரம் பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு நம் உடலில் பாய்ந்து, உடலில் உள்ள நோய்களையும், நம்மில் உள்ள கர்ம வினைகளையும் நீக்குகிறது என்பது மரபு.

நம் விஸ்டத்தின் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் ரத சப்தமியின் சிறப்புகள், கொண்டாடும் வழிமுறைகள், என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Radha Saptami Thoughts

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ரத சப்தமி ஸ்லோகம்: https://youtu.be/GL8TA_6yeTY

Google மேடையில் ஜொலித்த ஆர்ய வைஸ்ய மாணவி! 🥇

நம் வைஸ்ய சமூகத்தின் இளைய தலைமுறையினர், உலகளாவிய சவால்களைத் தீர்க்கும் ஆற்றலோடு வளர்ந்து வருகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு மகத்தான சான்று! கூகுள் போன்ற சர்வதேச நிறுவனங்கள் நடத்தும் மேடைகளில், நம் இளைய தலைமுறையினர் முத்திரை பதிப்பது நமக்கெல்லாம் பெரும் கௌரவம்.

🌟 29,000 பேரில் ஒருவராக…!

கூகுள் நிறுவனத்தின் மதிப்புமிக்க ‘ஜெமினி AI ஃபண்ட் மீ கிரேஸி’ (Gemini AI Fund Me Crazy) ஹாக்கத்தான் போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 29,349 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். சவாலான இந்தப் போட்டியில், சோனா கல்லூரி B.Tech 3ம் ஆண்டு மாணவி L. பாவனா அவர்களின் தனித்துவமான சிந்தனை அவரை டாப் 3 வெற்றியாளர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது!

கடும் சவாலுக்கு மத்தியில், போட்டியில் வெற்றிகண்டு, அதற்கான உயரிய ரொக்கப் பரிசான ₹ இருபத்தி ஐந்து இலட்சத்தை வென்றுள்ளார். இந்த வெற்றி, வெறும் பரிசு அல்ல; இது நம் சமூகத்தின் இளம் சாதனையாளர்கள் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்பதற்கான நிரூபணம் ஆகும்.

♻️ காலத்தின் தேவைக்கேற்ப ஒரு கண்டுபிடிப்பு: ‘Rest In Pieces’

பாவனா அவர்களின் ப்ராஜெக்ட், அவரின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வின் எதிரொலி. “Rest In Pieces” என்ற பெயரில் இவர் உருவாக்கிய திட்டம், தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகளிலிருந்து (E-Waste) மறுபயன்பாட்டுக்கான பாகங்களை விற்பனை செய்யும் தளமாகச் செயல்படுகிறது..

இந்தத் திட்டத்தில், சீனியர் மாணவர்கள் கைவிட்ட ரோபோக்கள் மற்றும் சென்சார்கள் போன்ற உபகரணங்களில் உள்ள நல்ல ஹார்டுவேர் பாகங்களைக் கண்டறிந்து, அவற்றை ஜூனியர் மாணவர்களுக்கு மலிவான வளங்களாக வழங்கி, மின்னணுக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.

💡 ஜெமினி AI கருவியின் முக்கியப் பங்கு

இந்த மகத்தான திட்டத்தின் வெற்றிக்கு, கூகுளின் ஜெமினி AI (Gemini AI) கருவியே பாவனாவின் முக்கியச் சிந்தனைத் துணையாக இருந்துள்ளது.

செல்வி பாவனா அவர்களின் கூற்றுப்படி, அவர் தன் ப்ராஜெக்ட் குறித்த ஆராய்ச்சி (Research) மற்றும் அதைத் தெளிவாக விளக்கும் விளக்கப் படைப்புகளை (Presentation) உருவாக்குவதில், ஜெமினி AI கருவி முக்கியப் பங்காற்றியது. இதன் மூலம் அவர் தனது கருத்தை மிகவும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் நடுவர்கள் முன் சமர்ப்பிக்க முடிந்தது.

சோனா கல்லூரியின் கௌரவம்!

இந்தச் சாதனையைப் பாராட்டி, சேலத்தைச் சேர்ந்த Sona Incubation Foundation சார்பில் நடைபெற்ற ‘Think Salem 2025’ மாநாட்டில், செல்வி பாவனா அவர்கள் கல்லூரி சார்பில் கௌரவிக்கப்பட்டார்.

💐 நம் சமுதாயத்திற்கே உத்வேகம்!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த திரு. கே. லட்சாதிபதி மற்றும் திருமதி. பிரேமா தம்பதியரின் மகளான பாவனா அவர்களின் இந்தச் சாதனை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற உத்வேகத்தை நம் இளைஞர்களுக்கு அளிக்கிறது. பாவனா அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வாழ்வின் சிகரத்தைத் தொட வழிகாட்டும் “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டுப் பட்டறை!

​சாதனைகள் புரியத் துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு உந்துசக்தி தேவை. தன்னம்பிக்கை, சிறந்த திறன் மற்றும் தெளிவான இலக்கு இருந்தால், வாழ்வில் வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவது நிச்சயம். அந்தப் பயணத்திற்கு வைஸ்ய சமூக மாணவர்களுக்கு வழிகாட்டி, மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியே “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி!

​மூன்றாவது வருடமாக தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா இளைஞர் அணி பெருமையுடன் நடத்தும் “சிகரம் தொடுவோம்” – ​ஒரு நாள் பயிற்சியின் மூலம் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் வைஸ்ய மாணவர்கள் கற்றுக்கொள்ளப் போகும் முக்கியத் திறன்கள்:

  • பொதுப் பேச்சுத் திறன் (Public Speaking Skills): மேடைகளில் தயக்கமின்றி தங்கள் கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கும் ஆற்றல்.
  • ​பயம் நீக்கும் பயிற்சி (Break the Fear): இன்று பல மாணவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருப்பது பயம். அதை முற்றிலும் நீக்கி, தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும் பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்படும்.
  • உற்பத்தித் திறன் (Productivity) மற்றும் நேர மேலாண்மை (Time Management): கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, இலக்குகளை விரைந்து அடையும் ரகசியங்கள்.
  • விளையாட்டு மற்றும் ஃபிட்னஸ் (Sports & Fitness): ஆரோக்கியமான உடல் மற்றும் மனதை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்.
  • ​கலாச்சாரம் மற்றும் பண்புக்கூறுகள்: நமது பாரம்பரியமான வைஸ்ய கலாச்சாரம், பண்பாடு, மற்றும் விழுமியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு.

​இந்தச் செயல்முறைகள் மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான விதையை விதைத்து, சமூகத்திற்குப் பொறுப்பான மனிதர்களாக வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று தமிழ்நாடு ஆரியவைசிய மகாசபா இளைஞர் அணியின் தலைவர் திரு. ரஞ்சித்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

​இந்த ஆண்டு, நான்கு சிறப்புமிக்க பயிற்றுநர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வருகிறார்கள்:

  1. ​ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள்: ஸ்ரீ வாசவி பீடத்தின் இரண்டாவது பீடாதிபதி. இவர் நமது வைஸ்ய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்கள் பற்றி சிறப்பான விளக்கங்களை அளிக்கவிருக்கிறார்.
  2. ​திரு. சந்தோஷ் சுப்பிரமணியம்: டிஸ்கவரி லேர்னிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO (Professional Educational Trainer).
  3. மாணவர் ரத்னா டாக்டர் K. கார்த்திக் வேலு: Professional Life Skill Trainer, CEO of One Life One Chance.
  4. திரு. V. பிரதீப்: SoBo Sports நிறுவனத்தின் உரிமையாளர். உடல் மற்றும் மன ஆரோக்கியம் (Physical and Mental Fitness) குறித்து விளக்கவிருக்கிறார்.

​இப்படிப்பட்ட சிறந்த ஆளுமைகளுடன் உரையாடி, அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு!

சிகரம் தொடுவோம் குறித்து தமிழ்நாடு ஆரியவைசிய மகாசபா இளைஞர் அணியின் தலைவர் திரு. ரஞ்சித்குமார் அவர்கள் அளிக்கும் விளக்கத்தை காணுங்கள்:

இந்த ஆண்டு இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது:

  • சேலம்: டிசம்பர் 28 ஆம் தேதி, வைசியா கல்லூரி (Vysya College, Salem).
  • சென்னை: ஜனவரி 4 ஆம் தேதி, SKPD பெண்கள் கல்லூரி (SKPD Women’s College, Chennai).

​இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம், இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
https://tnevysya.com/Sigaram_Thoduvom.php

​மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:
​S. சிவகுரு – +91 85085 66900
​M. ஹேம்நாத் – +91 74186 31691

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

சின்னி செட்ல கோத்திர (பெட்ட தேவுடு) பூஜை: 122வது வருட விழா

வரும் செப்டம்பர் 21, 2025 அன்று 122-வது வருட சின்னி செட்ல கோத்திர பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர், பேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான சத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, காலை 6.00 மணிக்கு பொங்கல் வைக்கும் சடங்குடன் தொடங்குகிறது. தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முக்கிய நிகழ்வுகளான கூரம்மத்தள்ளி பூஜை (பெட்ட தேவுடு) மற்றும் சின்னி செட்ல கோத்திர பூஜை ஆகியவை நடைபெற இருக்கிறது.

இந்த 122 வருட பாரம்பரியத்தில் சின்னி செட்ல கோத்திரக்காரர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 98948 21388, 98942 12227

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

திருவூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவபாஷாண கிருஷ்ணன் பிரதிஷ்டை! வைஸ்யர்களின் முயற்சியில் உருவான சரித்திரம்!!

நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பகவத் கீதையை நமக்கு உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணரின் நவபாஷாண சிலையை வடபழனி சித்தரின் நேரடி சீடரும், சித்த வைத்தியருமான திரு. ரமேஷ் குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.

‘நவம்’ என்றால் ஒன்பது, ‘பாஷாணம்’ என்றால் விஷம். ஒன்பது வகையான விஷங்களை சித்த முறைப்படி இணைத்து உருவாக்கப்பட்டதே நவபாஷாண சிலை. இந்த சிலைகளுக்கு அபூர்வமான மருத்துவ சக்திகள் உண்டு என்பது சித்தர்களின் கூற்று. பழனி முருகனின் அபிஷேக நீர் அருந்தியவர்களுக்குப் பல நோய்கள் குணமான கதைகள் ஏராளம். அதேபோல, இந்த கிருஷ்ணர் சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக நீரை அருந்தினால், தீராத நோய்களும் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

மகா கும்பாபிஷேகம் ஒரு சரித்திர நிகழ்வு!

சென்னை மாநகர் ஆர்ய வைஸ்ய மகாசபாவிற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 4, 2025 வியாழக்கிழமை அன்று சென்னை மாநகர் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் அஜந்தா திரு K. K. திரிநாத்குமார் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனுடன், கேட்ட வரத்தை அளவில்லாமல் அளிக்கும் 10 பரிவார தேவதைகளும் அருள்பாலிக்கின்றனர். மேலும், மன அமைதி தேடும் பக்தர்களுக்காக, ஒரு தியான மண்டபமும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆலயம் அமைவிடம்:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில், செவ்வாய்ப்பேட்டை ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை – போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால அமாவாசை குழந்தைகளுக்காக ஏன் கொண்டாடுகிறோம் ? அதனால் என்ன பலன்? என பல கேள்விகளுக்கான விடையை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

கௌரியை செய்வதற்கு Expert அட்வைஸ் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமி – ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி கருட பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.

பாம்புகளும் கருடரும் பகைவர்கள்!

  • ஆனால் வாசுகி போன்ற நாகங்களுக்கு கருடர் நண்பராக இருக்க என்ன காரணம்?
  • ஒரு சகோதரி பாம்பின் முயற்சியால் ஆயிரக்கணக்கான நாகங்கள் காப்பாற்றபட்டது எப்படி?
  • சகோதர பாசத்திற்கும் இந்த பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்?

என்பதை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

கௌரியை செய்வதற்கு Expert அட்வைஸ் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமிக்கு முன்பு வரும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். இவ்வழிபாடு வேத காலத்திலிருந்தே இருந்துவருகிறது.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 28 ஆம் தேதி நாக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் நாக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் நாக சதுர்த்தியின் விரதத்தால் வரும் பலன்கள், நாக சதுர்த்தி கதையின் நீதி மற்றும் விளக்கம் ஆகியவற்றை எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

கோயம்புத்தூர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஒரு சரித்திர நிகழ்வு!

ஜெய் வாசவி! கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் குறித்த முக்கிய தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு இதோ:

கோயம்புத்தூரின் வைசியாள் வீதியில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பல நூற்றாண்டுகளின் சரித்திரத்தையும், பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளத்தையும் தாங்கி நிற்கும் ஒரு புனித ஸ்தலம்.

ஆரிய சமூகத்தினருக்குச் சொந்தமான இந்த தேவஸ்தானம், காலத்தால் அழியாத பாரம்பரியப் பெருமை கொண்டது.

ஸ்ரீ கணபதி, ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ சீதாராம சன்னதி, நவக்கிரக சன்னதி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களுடன் அன்னை ஸ்ரீ வாசவி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

காலத்தின் சாட்சியாகப் பல தலைமுறைகளின் பக்தியைத் தாங்கி நிற்கும் இந்த ஆலயம், தனது மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைக் காணவிருக்கிறது.

Video Credits: திரு. சுரபி கார்த்திக் அவர்கள்

மகா கும்பாபிஷேக விவரங்கள்:

🗓️ தேதி: திங்கள், ஜூலை 7, 2025 (ஆனி மாதம் 23 ஆம் நாள்)
⭐ நட்சத்திரம்: அனுஷ நட்சத்திரம், சுபயோக சுப தினம்
⏰ நேரம்: காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் (சிம்ம லக்னத்தில்)
📍 இடம்: ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், வைசியாள் தெரு, கோயம்புத்தூர்

யூட்யூப் சமூக ஊடக தளங்கள் மூலம் கும்பாபிஷேகத்தை நேரடியாக காணலாம்: https://www.youtube.com/live/Ap4JDJSZdjg?si=a2i7CmU_njdNkcyw

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் அனைவரும் ஒன்றுகூடி அன்னையின் அருளைப் பெற்று, இந்த ஆன்மீக நிகழ்வை நமது சமூகத்திற்கு ஒரு மைல்கல் நினைவாக மாற்றுவோம்!

அழைப்பிதழ்:

1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_1
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_2
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_3
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_4
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_5
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_6
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_7
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_8
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_9
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_10
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_11
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_12
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_13
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_14
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_15
1751778675784-e99f38c2-4abb-481d-aa31-3fb785ec1ea5_16
previous arrow
next arrow

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group